;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

0

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களிடம் வைத்தியர் ரி.வினோதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக பங்குகொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. என்றும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் இது வரை 2,635 கொரோனா தொற்றாளர்கள், மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் மேலும் இருவர் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் திகதி மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 45 தொற்றாளர்கள் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா மரண வீதம் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுவதாக பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறினார்.

இந்த மாதம் 11 நாட்களில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாள் ஒன்றிற்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கொரோனா தொற்றாளர் மரணங்கள் பதிவாகி உள்ளன..

அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.அத்தோடு அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இவ் வியத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்

நுளம்புகள் பெருகக்க்கூடிய இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை சுத்தம் செய்து நுளம்பு தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சதவீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதனைத் தவிர மொத்தமாக 5,573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்கு பாடசாலையிலிருந்து இடை விலகிய வருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.