;
Athirady Tamil News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த மாவோயிஸ்டுகள்…!!!

0

பீகார் மாநிலம் கயா மாவட்டம், துமரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்து, சரயு சிங் போக்தா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்துள்ளனர். அப்போதும், ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள், 4 பேரின் உடல்களையும் மாட்டு கொட்டகையில் தொங்கவிட்டுள்ளனர். வீட்டை வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கி உள்ளனர். தாக்குதல் நடந்தபோது சரயு சிங் போக்தா வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினார்.

மாவோயிஸ்டுகள் ஒரு துண்டு பிரசுரத்தை அந்த வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அதில், சரயு சிங் போக்தாவும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் இன்பார்மர்கள் என்று கூறியிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, மார்ச் மாதம் நடந்த என்கவுண்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.