;
Athirady Tamil News

உனைஸ் நகர் கிராமத்திற்கு சர்வோதய மாவட்ட இணைப்பாளர் துஷ்யந்தன் விஜயம்!! (படங்கள், வீடியோ)

0

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சர்வோதய மாவட்ட இணைப்பாளர் உ. துஷ்யந்தன் (08) விஜயம் செய்தார்.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள உனைஸ் நகர் கிராமம் பாதிக்கப்பட்டது.

இதனால், மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், வெள்ளம் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உனைஸ்நகர், பேசாலை, எருக்கலம்பிட்டி, ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் துஷ்யந்தன் பார்வையிட்டார்.

அத்துடன், வெள்ளத்தினால் சேதமடைந்த கால்வாய்கள் மற்றும் வீதிகள் என்பனவற்றையும் பார்வையிட்ட மாவட்ட இணைப்பாளர், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் நலன்கள், தேவைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவசரமாக செய்துகொடுப்பதற்கு, மாவட்ட இணைப்பாளர் இதன்போது பிரதேச சபை, இராணுவம் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.