;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட கொவிட் பாதிப்பு முழு விபரம்!!

0

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்றைய தினம் (16) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் 2,704 தொற்றாளர்களும், தற்போது வரை 2,721 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து தலைமன்னார் பகுதி தபாலகத்தை சேர்ந்தவர்களுக்கு நேற்று (15) காலை தலை மன்னார் வைத்தியசாலையில் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தலை மன்னார் தபாலகத்தில் கடமையாற்றும் 07 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தலைமன்னார் தபாலகம் உப தபாலகங்கள் நேற்று மதியம் 12 மணியுடன் மூடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.