;
Athirady Tamil News

கடும் மழை காரணமாக மாங்குளம் உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்பு: வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது!! (படங்கள்)

0

மாங்குளம் பகுதியில் இன்று (17.11) மதியம் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதானால் வெள்ள நீரானது தாழ் நிலப் பிரதேசங்களை நோக்கி ஓடி வருவதுடன், குளத்து நீர்மட்டங்களும் அதிகரித்துள்ளது.

அத்துடன், மாங்குளம் – துணுக்காய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் காரணமாக 25 வரையிலான குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலரது வீடுகளுக்குள் வெள்ள நீரும் புகுந்துள்ளது. மழை தொடர்ந்தும் பெய்து வருவதனால் குழந்தைகள், சிறுவர்களுடன் வாழும் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.