;
Athirady Tamil News

இரண்டு வருடங்கள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது !!

0

வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அதைவிடுத்து இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியமைத்து, அடுத்த வாரத்துடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது. அதேப்போல் என்னைப்போன்ற பலர் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்து ஒருவருடேமே ஆகின்றது. எனவே எதிர்கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய, இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.