;
Athirady Tamil News

போலி சாரதி அனுமதி பத்திரங்களை விற்பனை செய்த மூவர் கைது !!

0

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை இன்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆட்டுப்பட்டித் தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைத்தே குறித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`சந்தேக நபர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்பதற்காக காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து தலா 1,500 ரூபாவுக்கு சட்டவிரோதமான முறையில் பெற்று, அவற்றில் காணப்படும் தரவுகளை அழித்து, சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் நபர்களின் தரவுகளை உள்ளடக்கி குறித்த போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.