;
Athirady Tamil News

’சஜித் அணியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ !!

0

ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தில் ”நந்தி ஒழிக, நீதி வாழ்க” என்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சாந்தரூப குருக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் இதுபோன்ற செயல் இந்து மக்களை வேதனைப்படுத்தியுள்ளதாகவும், ஒவ்வொருக்கும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரமுள்ள தேசத்தில் அக்கருத்துக்கள், செயல்கள் ஏனையவர்களுக்கு மனப்பாதிப்பை உண்டாக்குவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு கருத்துக்களை வெளிக்காட்டும் போது எமது சமயத்தின் சின்னமான நந்தி ஒழிக, நீதி வாழ்க. எனும் பதாதைகளை ஏந்தி இருந்தார்கள். தர்மத்தின் அடையாளமாக நாம் நந்தி தேவரை பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கு இரு வேறுபட்ட முரண்பாடுகளை காண்கிறோம். இச்செயலை மிகவும் கண்டிக்கின்றோம். உரியவாறு உரியவர்கள் விளக்கம் வழங்கி இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் கண்டிப்புடன் கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.