;
Athirady Tamil News

சிவகிரி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி 5 பேர் பலி…!!

0

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை குமாரவலசு என்ற பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் மதியம் 12.45 மணி அளவில் முத்தக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே அந்த வழியாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.

இதில் வேனில் இருந்த 3 பெண்கள், 2 ஆண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் சிவகிரி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக ஈரோடு-கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.