;
Athirady Tamil News

150 நாடுகளுக்கு அதிகமாக உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம் – பிரதமர் மோடி…!!

0

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே மருந்து பிரிவில் முதல் சர்வதேச கண்டுபிடிப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அளவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணங்களை ஒட்டுமொத்த உலகிற்கும் நாம் காட்டியுள்ளோம்.

உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.

இதேபோல், இந்த ஆண்டில் 100 நாடுகள் வரை 6.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.