;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா…!!

0

நாட்டில் புதிதாக 10,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 204 பேர் உள்பட நாடு முழுவதும் 267 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,349 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 11,787 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 9 ஆயிரத்து 708 ஆக உயர்ந்தது.

தற்போது 1,24,868 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 531 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

தடுப்பூசி

நாடு முழுவதும் நேற்று 51,59,931 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 115 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 10,72,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 63 கோடியை கடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.