;
Athirady Tamil News

அரியாலை கடற்பரப்பில் 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது!!

0

யாழ்ப்பாணம் அரியாலை கடற்பரப்பில் டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடல் வழியாக போதைப் பொருள்கள் உள்பட பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையினர் நாட்டின் கரையோரங்களில் வழக்கமான சுற்றுக்காவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவு இன்று ( 21 ) காலை யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

கடற்படை நடவடிக்கை காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாது கைவிடப்பட்ட டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 பைகளில் 105 பொதிகளில் இடப்பட்டிருந்த 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தற்போதைய பெறுமதி 68 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. என்றுள்ளது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.