;
Athirady Tamil News

மாவீரர் நாளுக்கு தடைகோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றமும் தள்ளுபடி.!! (வீடியோ)

0

சுன்னாகம் , தெல்லிப்பளை, அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசாரினால் மாவீரர் நாளுக்கு தடைகோரி மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, குறித்த மனுவை மல்லாகம் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த விண்ணப்பத்தின் போது, பொலிஸார் குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் , நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டி இருந்தனர்.

அதேவேளை சாவகச்சேரி மற்றும் கொடிகாம பொலிஸாரினால் சாவகச்சேரி நீதிமன்றில் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சாவகச்சேரி நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு நீதிமன்றிங்களிலும் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி , பொலிஸாரின் மனுவுக்கு எதிராக தமது கடுமையான எதிர் வாதங்களை முன்வைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.