;
Athirady Tamil News

வவுனியாவில் தொடரும் யானைகளின் உயிரிழப்புக்கள்!!

0

வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் கடந்த வருடம் முதல் இவ்வருடம் வரை 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன .

வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் நவம்பர் (23) இன்று வரையான காலப்பகுதியில் செட்டிகுளத்தில் 3, நெடுங்கேணியில் 3 , வவுனியாவில் 2 காட்டு யானைகளும் 08 யானைகள் உயிரிழந்துள்ளது.

காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றதுடன் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கின்றது . இதனால் மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வசித்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த வருடம் 2020 ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 10 யானைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.