;
Athirady Tamil News

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி!! (படங்கள்)

0

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் போது பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சில சட்டத்தரணி ஆஜராகி தடை உத்தரவை பிறப்பிக்க கூடாதென வாதம் செய்தனர்.

இதனை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.