;
Athirady Tamil News

வவுனியாவில் குடிநீர் தேவைக்காக குளாய் கிணறு அன்பளிப்பு!! (படங்கள்)

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக புலம்பெயர் நிதிப் பங்களிப்பில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று (23) கையளிக்கப்பட்டது.
செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காந்திநகர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கான கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் நிதியில் ஜனனம் நம்பிக்கை மையத்தின் ஏற்பாட்டில் குடிநீர் குளாய் கிணறு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஈலிங் சிறி கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பினூடாக நிர்மணிக்கப்பட்ட குடிநீர் பொது குளாய்கிணறானது, யாழ்ப்பாணம் சிவகுரு ஆதினத்தின் குரு, சிவசிறி வேலன் சுவாமிகளால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகள் கிராம மக்களால் மாலை அணிவித்து வரவேற்றப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வகள் ஆரம்பமாகியிருந்தது. தலைமையுரை தமிழருவி சிவகுமாரனால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பொது மக்கள் சிவசிறி வேலன் சுவாமிகளிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
ஜனனம் நம்பிக்கை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் ஜெகன் நிகழ்வின் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.