;
Athirady Tamil News

ஆசிரியர்களுக்கு வௌிநாட்டில் வேலை வாய்ப்பு!!

0

சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர்களை தெரிவு செய்து தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 இலங்கை ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையில் உள்ள சீசெல்ஸ் துணைத் தூதரகம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

கணித பாடத்திற்கு ஏழு வெற்றிடங்களும், விஞ்ஞானப் பாடத்திற்கு 10 வெற்றிடங்களும் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.