;
Athirady Tamil News

தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி!

0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுத்து மூலம் அனுமதி கோரி இருந்தார்.

அதற்கு , நகரசபை தலைவர் என்.செல்வேந்திரா , ” பொலிஸார் தீருவில் திடலை எந்த நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளமையால் , திடலில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது” என எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார்.

அந்நிலையில் , சபை உறுப்பினர்கள் சபையை கூட்டி அது தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நகர சபை தலைவரிடம் கோரியதை அடுத்து சபைக்கூட்டம் கூட்டப்பட்ட போது , கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து , சுகாதார நடைமுறைகளுடன் நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்துவதாயின் அதற்காக மாத்திரமே பொலிசாரிடம் அனுமதி கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.