;
Athirady Tamil News

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(27.11.2021) காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில் ஆர்க் லேன், டச்சுவீதி, சங்குவேலி பிள்ளையார் கோவிலடி, சங்குவேலி, அட்டகிரி, ஆனைக்கோட்டை வி.சி, குளப்பிட்டி வீதி சாவற்காட்டுச் சந்தி, காக்கைதீவு,குளப்பிட்டி, ஆனைக்கோட்டை வீதி, மூத்த விநாயகர் கோவிலடி, நவாலி, நவாலி கலையரசி வீதி, நவாலி சென். பீற்றர்ஸ் வீதி, நவாலி வேலக்கைப் பிள்ளையார், கொக்குவில் மேற்கு வராகி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.