;
Athirady Tamil News

ரயில் சேவையில் தற்காலிக நேர அட்டவணை மாற்றம்!!

0

காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடும் உத்தரதேவி தொடருந்து சேவை நாளையும் நாளைமறுதினமும் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கான ரயில் பாதையில் முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் உத்தரதேவி தொடருந்து நாளையும் நாளைமறுதினம் காலை 8 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும்.
கொழும்பிலிருந்து மதியம் 12.30 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் என்றும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

எனவே பயணிகள் நேர அட்டவணையை பின்பற்றி ரயில் நிலையங்களுக்கு சமுகமளித்தால் போதும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.