;
Athirady Tamil News

அதிவேக வீதியில் சாரதிகள் இருவரின் செயல்! எச்சரித்த நீதவான்!

0

அதிவேக வீதியில் பேருந்துகளை நிறுத்தி சாரதி இருக்கைகளை மாறிக்கொண்ட சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடங்கொட பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும் மத்துகம பிரதான நீதவான் தம்மிக்க உடுவ விதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஒவ்வொருவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

இந்த பேருந்துகள் கடவத்தை, அம்பலாங்கொடை சேவையில் ஈடுபடும் நிலையில் தொடங்கொடை 38 3 தூண் அருகில் இவ்வாறு பேருந்துகளில் இருந்து மாறிக் கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.