;
Athirady Tamil News

இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு – மக்கள் அச்சடைய தேவையில்லை!!

0

வடமாகாணத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வரவு காரணத்தினால் இன்று (28) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இரண்டு வான் கதவுகள் 6 அங்குலத்திற்கும், இரண்டு வான் கதவுகள் 12 அங்குலத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

” குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வருகின்றமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது வெளியேறுகின்ற நீர் காரணமாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.