;
Athirady Tamil News

புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம்!!

0

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கிறது.

இந்நிலைமை தொடர்பில் மக்கள் அதிகம் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும், முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட கொவிட் வகை மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐரோப்பா முழுவதிலும் காணப்படுவதால் பல நாடுகள் தமது எல்லைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

குறித்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் எவரினுடாவேனும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.