;
Athirady Tamil News

வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும் சம்பவங்கள்!! (படங்கள்)

0

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை சாய்ந்த மருது பகுதியிலும் பதிவாகி இருந்த சம்பவத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்றைய தினம் புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்த நிலையில் , அதனை அணைக்க முற்பட்டவர்கள் , அது அணையாத நிலையில் அதனை அருகில் இருந்த நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படாததால் , பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

நேற்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்தது , இன்றைய தினம் யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.