;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29.11.2021) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட செயலக பிரிவில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற கூற்றை விளக்கி கொள் , அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய வயதினை உயர்த்தாதே , தங்களால் நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் உத்தியோகத்தர்கள் நாங்கள் நாட்டிற்கு சுமையா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.