;
Athirady Tamil News

பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனா!!

0

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.