;
Athirady Tamil News

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும்!

0

தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள் நேற்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மலையக ரயில் சேவையில் ´பொடி மெனிகே´ ரயில் மாத்திரம் நேற்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கான பொடி மெனிகே புகையிரதம் இன்று காலை 5.55 மணிக்கு புறப்பட்டது.

அதேவேளை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிய மற்றுமொரு புகையிரதம் நேற்று காலை 8.30 மணிக்கும் புறப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில், பொடி மெனிகே ரயில் மாத்திரம் பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளம் ரயில் பாதையில் நேற்றைய தினம் முதல் புத்தளம் வரையிலான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் புத்தளம் மற்றும் – பாலாவிக்கிடையில் ரயில் பாதையில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவை பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புனானி மற்றும் வெலிகந்த ரயில் பாதையில் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த 27 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதன்படி நேற்றிரவு 7 மணிக்கு மீனகயா என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையில் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி தபால் ரயில் சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.