;
Athirady Tamil News

கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு..!!

0

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அங்கு புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.

மோசமான குடிநீர் மூலமே இந்த வைரஸ் பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுபோக்கும், தலைவலியும் இருந்தது. அவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ்

இதில் 54 மாணவிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுபோல அந்த விடுதியில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாதிப்புக்கு ஆளான மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே திருச்சூரில் கல்லூரி மாணவிகள் விடுதி அமைந்துள்ள பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதற்காக வீடு, வீடாக சென்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நோரோ வைரஸ் பரவலும் அதிகரித்து இருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.