;
Athirady Tamil News

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

0

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இப்பண்டிகைக் காலத்தில் பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக் கொடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.