;
Athirady Tamil News

வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!! (படங்கள்)

0

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்த பெண் சமையல் செய்து விட்டு எரிவாயு அடுப்பினை நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து வெடித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அந்த பெண் மேலும் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக சமையல் எரிவாயு கொள்கலனில் இருந்து ரெகுலேட்டரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா – இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.