;
Athirady Tamil News

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி!

0

கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று தெரிவித்திருந்தார்.

ethyl mercaptan வாசனை அளவை 14 ஆக உயர்த்தும் வரை விநியோகத்தை நிறுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.