;
Athirady Tamil News

ஹெலிகாப்டர் விபத்து- 2 பாகிஸ்தான் ராணுவ பைலட்டுகள் பலி..!!

0

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சியாச்சின் பிராந்தியம் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதேபோன்று, பாகிஸ்தான் ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.