;
Athirady Tamil News

யாழ்.நாவற்குழி – புதிய குடியேற்றத் திட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்வெட்டு!!

0

யாழ்.நாவற்குழி – புதிய குடியேற்றத் திட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் உருவாகி அது பின்னர் வாள்வெட்டு மோதலாக மாறியிருக்கின்றது.

குறித்த தாக்குதலில் 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.