;
Athirady Tamil News

உலக மண் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

உலக மண் தினத்தினை முன்னிட்டு, எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு இன்று (07) மாலை நடைபெற்றது.

வடமாகாண மாகாண கல்வி திணைக்கள மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வு பிரதி கல்வி பணிப்பாளர் (விவசாயம்) திருமதி வேழினி பாலேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர், பிரதி மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர் ஆலோசகர், எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன், கழக செயலாளர் ம.சசிகரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.