;
Athirady Tamil News

மாற்றுத் திறனாளிகள் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!! (படங்கள்)

0

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை (08) இடம்பெற்றது .

சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய செயற்ப்பாட்டு திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாரு குறித்த விழிப்புணர்வு இடம்பெற்றது . மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன் போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்த்தினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.