;
Athirady Tamil News

வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு!!

0

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.