;
Athirady Tamil News

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி பெண் பலி!

0

காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலவாக்கலை தோட்டத்தின் கீழ் பிரிவை சேர்ந்த அபேசிங்க முதியன்சேலாகே சந்திராவதி (வயது 50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்திற்கு மின்கம்பி இழுக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த பெண் மின் இணைப்பை துண்டிக்காது மரக்கறி தோட்டத்திற்கு சென்று வேலை செய்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இறந்தவரின் கணவர் வீட்டுக்கு வந்த போது மனைவி வீட்டில் இல்லாததால் மரக்கறி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு மனைவி மின்கம்பியில் சிக்கி உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

மின் இணைப்பை துண்டித்த அவர், தனது மனைவியை மின் கம்பியில் இருந்து அகற்றி, சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.