;
Athirady Tamil News

யாழ்.எம்.ஜி.ஆரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் சர்வமத தலைவர்கள்!! (படங்கள்)

0

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இன்று கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் யாழ் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை நடாத்தினர்.

இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் ,அயலவர்கள் அவரது நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் நினைவு தினங்களை அனுட்டித்து வந்ததுடன் அத்தினங்களில் வறிய மக்களுக்கு தன்னாலான உதவிகளையும் யாழ் எம்.ஜி.ஆர் செய்து வந்துள்ளார்.

யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் கடந்த மாதம் 11 ஆம் திகதி நோய்வாய்பட்ட நிலையில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.