;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம்…!!

0

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்போரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர்.

தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை சுற்றிவளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.