;
Athirady Tamil News

மிசோரமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

0

மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை 12.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 அளவுகோலாகப் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.