;
Athirady Tamil News

யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

0

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது 70) உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை , எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குருக்களை , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.