;
Athirady Tamil News

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து!! (படங்கள்)

0

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார்.

இன்று (12.12) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் காரணமாக சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அது முழுமையாக சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டியின் சாரதி விபத்தின் போது பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பாதுகபாப்பற்ற புகையிரதக் கடவையில் பல தடவைகள் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.