;
Athirady Tamil News

சுவர் விழுந்து இராணுவ வீரர் மரணம் !!

0

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) பிற்பகல் பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மடுல்சீமை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.