;
Athirady Tamil News

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!!

0

உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலைவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே ஒமைக்ரான் தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் குஜராத்தில் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரட் நகராட்சி துணை சுகாதார ஆணையர் டாக்டர் ஆஷிஷ் நாயக் கூறியதாவது:-

கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓரிரு நாட்கள் இடைவெளியில் அகமதாபாத்தில் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு சோதனைகளிலும் நெகட்டிவ் வந்துள்ளது.

பிறகு, தொற்று அறிகுறிகள் தெரிந்த நிலையில், மூன்றாவது முறையாக பரிசோதனை செய்ததில் நபருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் சூரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.