;
Athirady Tamil News

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 18-ந்தேதி பாதயாத்திரை…!!

0

மத்திய மோடி அரசு, நாட்டின் பொருளதாரத்தை தவறாக நிர்வகிப்பதையும், பணவீக்க விவகாரத்தில் உணர்திறன் இன்றி இருப்பதையும் மக்களிடையே அம்பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பொது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தின் அமேதி நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 18-ந்தேதி ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துகிறார்.

தனது முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் அவர் நடந்து சென்று மக்களிடையே இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில கட்சி பொறுப்பாளருமான பிரியங்காவும் பங்கேற்கிறார்.

இந்த விவகாரத்தில், டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிரமாண்டமான முறையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்களிடம் ராகுல் காந்தி எடுத்துரைத்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.