;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவிப்பை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் குழாய் வழி வழங்கப்படுகின்ற நீர் இணைப்பை பெற்றுக் கொண்ட மக்கள் நீர் இணைப்பை பெற்றும் இதுவரை மாதாந்த கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெறாதவர்கள், நீர் மானி பொருத்தியும் நீரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், நீர்மாணியில் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் புதுகுடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்திலோ அல்லது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் அலுவலக தொலைபேசி இலக்கமான 021-2283981 எனும் தொபேசி இலகத்துடனோ தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.