;
Athirady Tamil News

இலட்சக்கணக்கான துப்பாக்கி ரவைகள் தொடர்ந்தும் மீட்பு!!

0

கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதி கிராம அலுவலர் கோணாமலை சேகர் முன்னிலையில் நேற்று (15) முற்பகல் 9 மணி முதல் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது ரி56 ரக துப்பாக்கியின் 750 ரவைகள் உள்ளடங்கிய 84 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக இப்பெட்டிகள் இல்லாமல் குழிக்குள் இருந்து 46,000 ரி56 ரக ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் தோட்டாக்கள் யுத்த காலப்பகுதியின்போது, ​​தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.