;
Athirady Tamil News

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

0

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-

10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையில் நடைபெறுகிறது.

இதில் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும். 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 14-ந்தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும்.

இதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நிறைவு பெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும்.

10-ம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ந் தேதி வரை நடைபெறும்.

தேர்வு கால கட்டத்தில் கொரோனா விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்…அமெரிக்காவில் இதுவரை 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.