;
Athirady Tamil News

மாமியாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகள் கைது…!!!

0

தாராவி கிராஸ்ரோடு சிவ்நாராயணி தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் மனைவி அந்தோணியம்மாள் (வயது61), மகன் முருகன், மருமகள் சாந்தி (37) ஆகியோருடன் வசித்து வந்தார்.

அந்தோணியம்மாளுக்கு இதய நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மகன் முருகன் சிகிச்சைக்கு செலவு செய்து வந்தார். இந்த நிலையில் டாக்டர், அந்தோணியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்படி அறிவுறுத்தினார். இதனால் அந்தோணியம்மாள் தனது சிகிச்சைக்கு தேவையான ரூ.3 லட்சம் தரும்படி மகன் முருகன், மருமகள் சாந்தி ஆகியோரிடம் வலியுறுத்தி வந்தார்.

இதனால் மாமியார் அந்தோணியம்மாளுக்கும், மருமகள் சாந்தியுடன் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13-ந்தேதி காலை 10 மணி அளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மருமகள் சாந்தி அங்கிருந்த கயிற்றை கொண்டு மாமியார் அந்தோணியம்மாளின் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால் மூச்சுத்திணறி மாமியார் மயங்கி கீழே விழுந்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த மகன் முருகன் தாய் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அந்தோணியம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த தாராவி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மருமகள் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.