;
Athirady Tamil News

மாணவனை சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவர் குழு – வடமாகாண கல்வித் திணைக்களம்!!

0

வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க மூவர் கொண்ட விசாரணைக்குழுவை வடமாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.

மாணவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நேற்றைய தினம் செய்தி வெளியானது.

எனினும் பெற்றோர் பாடசாலைக்குச் சென்ற போது மாணவனை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு உள்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டிருந்தார்

இந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் மாணவன் சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.